கவுந்தப்பாடி அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாரா மெடிக்கல் சைன்ஸ் பிசியோதெரபி கல்லூரியில் உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி 8.9.2023 நேற்று நடைபெற்றது. கோபி காவல் நிலையத்தில் இருந்து கரட்டூர் வளைவு வரை பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்வினை கோபி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். மேலும் கல்லூரி முதல்வர் நந்தகுமார் அவர்கள் தலைமையில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பிசியோதெரபியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.