Type Here to Get Search Results !

ஈரோட்டில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் ஈரோடு ரயில்வே காலனி பள்ளியில், ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்களால் 18.03.2022 அன்று துவக்கி வைக்கப்பட்டது...

style="clear: both;">
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களால் ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஏற்கனவே தொடக்கி வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த 18.03.2022 அன்று ஈரோடு ரயில்வே காலனி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
இதில் ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மற்றும் துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
இதில் ரத்தப் பரிசோதனை மற்றும் பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது மேலும் கண் மருத்துவம் மற்றும் சிறப்பு சிகிச்சைகள் ஆகியவையும் அளிக்கப்பட்டது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் காலிங்கராயன் மெடிக்கல் சென்டர், ஆல்ஃபா ரத்தப் பரிசோதனை நிலையம் மற்றும் பல மருத்துவமனைகளும் பங்கு பெற்று சிறப்பான சேவையை வழங்கினார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.