பங்குனி உத்திரம் திருவிழா முன்னிட்டு ஈரோட்டிலிருந்து பழனிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் -
March 18, 2022
0
பங்குனி உத்திரம் திருவிழா முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு
போக்குவரத்துக் கழகம், ஈரோடு மண்டலம் சர்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
வருகன்ற 17.03.2022 முதல் 19.03.2022 பங்குனி உத்திரம் திருவிழா முன்னிட்டு
பழனி செல்வதற்காக ஈரோடு, அந்தியூர், கொடுமுடி, கரூர், பவானி, கோபிசெட்டிபாளையம்,
சத்தியமங்கலம் மற்றும் சேலம் ஆகிய இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள்
இயக்கப்படவுள்ளது.
மேற்கண்ட சிறப்பு பேருந்துகள் வசதியை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணிஅவர்கள் தெரிவித்துள்ளார்.