Type Here to Get Search Results !

கருமுட்டை மோசடி விவகாரத்தில் சிறுமிக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியும், இதற்குப் பின்னணியில் உள்ள மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டியும் பா.ஜ.க சார்பாக மனு கொடுக்கப்பட்டது.

ஈரோட்டில் கருமுட்டை மோசடி வலைப்பின்னலில் சிக்கிக்கொண்ட சிறுமியின் தற்கொலை முயற்சியை தொடர்ந்து அச்சிறுமிக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும் மேலும் இதற்குப் பின்னணியில் உள்ள மருத்துவர்கள் மருத்துவமனைகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அடிப்படையிலும்  30.6.2022 இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம், ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கோரிக்கை மனு  கொடுக்கப்பட்டது.  இந்நிகழ்வில் ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எஸ் டி செந்தில்குமார், பொதுச் செயலாளர்கள் சிவகாமி மகேஸ்வரன், செந்தில்,  வேதானந்தம் ஈஸ்வரமூர்த்தி,  பொருளாளர் சுதர்சன்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சௌந்திரம்,  ஈரோடு மகளிர் அணி மாவட்ட தலைவர் புனிதம் ஐயப்பன்,  விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில துணைதலைவர் அக்னி ராஜேஷ்,  முன்னாள் ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன்  மற்றும் ஈரோடு மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் அண்ணாதுரை உட்பட   பல்வேறு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.