Type Here to Get Search Results !

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24 ஆம் ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு துவக்க விழா...

ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரியில் 2023-24 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு துவக்க விழா நடைபெற்றது.  இவ்விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில் முதலாம் ஆண்டு 800 க்கும் மேற்பட்ட மாணவர்களும் சுமார் 100க்கும் மேற்பட்ட பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவின் முதல் நிகழ்வாக கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ. மோகனசுந்தரம் வரவேற்புரை நல்கி கல்லூரியின் சிறப்பு பற்றியும், பாடப் பிரிவுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். 

அவரைத் தொடர்ந்து கல்லூரியின் செயலாளர் திரு.கே.சி. கருப்பணன் அவர்கள் தலைமையுரை வழங்கினார். அவர்தம் உரையில் மாணவர்கள் கல்லூரியில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் குறித்தும், எதிர்கால வேலை வாய்ப்பு பற்றியும் விரிவாக விளக்கிக் கூறினார். மேலும் கல்லூரியின் தலைவர் திரு.பி. வெங்கடாசலம், கல்லூரியின் இணைச்செயலாளர் திரு.ஜி.பி. கெட்டிமுத்து மற்றும் கல்லூரியின் அறங்காவலர் திரு. கே. கவியரசு ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். மேலும் கல்லூரியின் துறைத் தலைவர்கள் அனைவரும் துறைவாரியாக தங்களது அறிமுக உரையில் தாங்கள் சம்பந்தப்பட்ட துறையின் முக்கியத்துவத்தைக் கூறி வேலைவாய்ப்பு விபரங்களை எடுத்துரைத்தனர்.  இது முதலாம் ஆண்டு மாணவர்களின் தன்னம்பிக்கையை மேலும் கூட்டியது. 

இறுதியாக கல்லூரியின் துணை முதல்வரும் வணிகவியல் துறை தலைவருமான திரு.சி. நஞ்சப்பா அவர்கள் நன்றியுரை ஆற்றினார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.