Type Here to Get Search Results !

கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லுாரியில் இரத்ததான முகாம்....

ஈரோடு தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட ஆப் டெக்னாலஜி ட்ரஸ்டின் கீழ் இயங்கி வரும் கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லுாரியில் யோகா கூடத்தில் இரத்ததான முகாம் 
நடைபெற்றது. 

கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் கோபி அரசு மருத்துவமனை இரத்த வங்கி, சிறுவலுார் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் 
மூலம் இரத்ததான மூகாம் ஏற்பாடுகள் செய்திருந்தனர். 

இரத்ததான முகாமை கொங்கு
இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் தாளாளர்
திரு.A.வெங்கடாச்சலம் மற்றும் டாக்டர்.K.சிவசங்கர், அரசு மருத்துவமனை கோபி இரத்த
வங்கி மருத்துவ அலுவலர் ஆகியோர்  இரத்ததான முகாமை துவங்கி வைத்தார்கள். 
கல்லுாரியின் முதல்வர் டாக்டர் C.பிரதாப்சிங் வாழ்த்துரை வகித்தார். இரத்ததான முகாமில் கல்லுாரி
மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லுாரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்குபெற்று இரத்தானம் செய்தனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லுாரியின் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.