Type Here to Get Search Results !

கஸ்பாபேட்டையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இலவச பரிசோதனை முகாமை E. திருமகன் ஈவெரா MLA தொடக்கி வைத்தார்

மொடக்குறிச்சி கஸ்பாபேட்டையில் உள்ள மரியாளையா குழந்தைகள் காப்பகத்தில் செல்வம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு அரசன் கண் மருத்துவமனை, மெட்டி டென்டல் கிளினிக், நித்தின் கிளினிக் ஆகியோர் பங்குபெற்று இணைந்து நடத்திய காது, மூக்கு, தொண்டை, கண், பல் இலவச பரிசோதனை முகாமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E. திருமகன் ஈவெரா MLA அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் J.J பாரதி, நிறுவனர், செல்வா சாரிட்டபிள் டிரஸ்ட், திருமதி V. சாந்தி, மரியாளையா காப்பக பொறுப்பாளர், மருத்துவர்கள், ஈரோடு மாநகர காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் திருச்செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய அணி பொதுச் செயலாளர் V.M. கிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர் விஜயபாஸ்கர், திண்டல் பாலாஜி, SM & IT ஈரோடு மாநகரத் தலைவர், V.K. சந்தோஷ் ராஜா, காப்பக பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இனிதாக நடைபெற்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.