Type Here to Get Search Results !

39 வது வார்டில் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பிரச்சாரம்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட  39 வது வார்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி கேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு 39 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதாஞ்சலி செந்தில்குமார் அவர்களின் பகுதியில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி,  சட்டமன்ற உறுப்பினர்  ஐ.பி.செந்தில்குமார்,  காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் கேபிள் செந்தில் ஆகியோர்  வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

இந்த வாக்கு சேகரிப்பில் 39 வது வார்டு செயலாளர் மகேஸ்வரன், தெற்கு மாவட்ட அவை தலைவர் குமார் முருகேஷ் உள்ளிட்ட பலர்  ஈடுபட்டனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.