Type Here to Get Search Results !

கட்டுமானத்தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில், கட்டுமானப் பணியிடத்து விபத்து மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.1.20 கோடி வழங்கப்பட்டுள்ளது - கலெக்டர் தகவல்.


தமிழ்நாடு கட்டுமானத்தொழிலாளர்கள் நலவாரியம் (பதிவு பெற்ற/பதிவு பெறாத தொழிலாளர்கள்) மூலம் கட்டுமானப் பணியிடத்து விபத்து மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட கட்டுமானப் பணியில் ஈடுபட்டு பணியிடத்தில் விபத்து மரணமடைந்த தொழிலாளர்களின் நியமனதாரர்கள்/வாரிசுதாரர்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

மரணமடைந்த தொழிலாளி மேசன், எலக்ட்ரிஷியன், கட்டுமான சித்தாள் போன்ற ஏதேனும் ஒரு அமைப்புசாரா கட்டுமானம் சார்ந்த வேலை செய்பவராக இருத்தல் வேண்டும். மரணமடைந்த தொழிலாளியின் இணையவழி விண்ணப்பங்களின் அடிப்படையில் உரிய ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தொழிலாளர் ஆணையர் அவர்களால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்திலிருந்து ரூ.5.00 இலட்சம் நிதியுதவி நியமனதாரர்/வாரிசுதாரர்களின் வங்கியில் நேரடியாக (ECS) வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கட்டுமானப் பணியிடத்து விபத்து மரணத்தினால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு ரூ.1.20 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது, என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தகவல்.


இத்திட்டத்தில் பயனடைந்த ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்குட்பட்ட புதுவள்ளியாம்பாளையம் பகுதியில் வசிக்கும் நிவாரண உதவி பெற்ற திருமதி.கோகிலா அவர்கள் தெரிவிக்கையில், எனது கணவர் கட்டிட கொத்தனார் (MASON) பணியில் ஈடுபட்டு வந்தார். எங்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், எனது கணவர் திருப்பூர் மாவட்டத்தில் கட்டுமானப் பணியில் சுவர் இடிக்கும் வேலையில் ஈடுபட்டு  கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து இறந்துவிட்டார். இது குறித்து, தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை அதிகாரிகள் உடனடியாக அணுகி, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் பணியிடத்து விபத்து மரணத்திற்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்க ஏற்பாடு செய்தனர்.

அதன்படி, எனக்கு ரூ.5.00 இலட்சத்திற்கான நிதியுதவி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. இந்த தொகை, எனது மூத்த மகளின் வாழ்வாதாரத்திற்கும், இளைய மகளின் கல்வி செலவிற்கும் எங்களது குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருந்து வருகிறது. மேலும், எனது இளைய மகளின் எதிர்காலத் தேவைகள் மற்றும் அவரின் உயர்கல்வி படிப்பிற்கும் இந்த தொகை பெரும் உதவியாக இருக்கின்றது. இந்த நலத்திட்ட உதவியினை வழங்கி என்னை போன்ற ஏழ்மை நிலையில் உள்ளோரின் வாழ்வை மேம்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.







Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.