Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ ச.சந்தோஷினி சந்திரா அவர்கள்‌, மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப்பெற்றுக்‌ கொண்டார்‌.

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நேற்று (09.05.2022) மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.ச.சந்தோஷினி சந்திரா அவர்கள்‌ தலைமையில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெற்றது.
இக்குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ முதியோர்‌ உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால்‌ கைவிடப்பட்டோர்‌ உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள்‌ உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்‌ துறை நடவடிக்கை, கல்விக்கடன்‌, தொழில்‌ கடன்‌, குடிநீர்‌ வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள்‌ மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்‌ குறித்து மொத்தம்‌ 186 மனுக்கள்‌ வரப்பெற்றன. பொதுமக்கள்‌ அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ அவர்கள்‌ பெற்று உரிய துறை அலுவலர்களிடம்‌ வழங்கி அவற்றின்‌ மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்‌. மேலும்‌, மாண்புமிகு முதலமைச்சர்‌ தனிப்பிரிவு மனுக்கள்‌, மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்களின்‌ முகாம்‌ மனுக்கள்‌, மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ பெறப்பட்ட மனுக்கள்‌ மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்டார்‌.
இக்கூட்டத்தில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.ச.சந்தோஷினி சந்திரா அவர்கள்‌, தொழிலாளர்‌ நலத்துறையின்‌ சார்பில்‌ கொத்தடிமைத்‌ தொழிலாளர்‌ முறை ஒழிப்பு குறித்த கையெழுத்து இயக்கம்‌ மற்றும்‌ விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்‌.
இக்கூட்டத்தில்‌ தொழிலாளர்‌ இணை ஆணையர்‌ திருமதி.சசிகலா, தொழிலாளர்‌ உதவி ஆணையர்‌ (அமலாக்கம்‌) திரு.வெ.மு.திருஞானசம்பந்தம்‌, தனித்துணை ஆட்சியர்‌ (ச.பா.தி) திரு.குமரன்‌, உதவி ஆணையர்‌ (கலால்‌) திருமதி.ஜெயராணி, மாவட்ட வழங்கல்‌ அலுவலர்‌ திருமதி.இலாஹிஜான்‌, மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நல அலுவலர்‌ திருமதி.மீனாட்சி, உட்பட அனைத்து துறை அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.