Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி ஜர்த்தல் பகுதியை சேர்ந்த கிருபானந்தம் இந்திய வனப்பணிக்கு தேர்வாகியுள்ளது பெருமை அடைய வைத்துள்ளது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி ஜர்த்தல் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (விவசாயி). இவரது இளைய மகன் கிருபானந்தம். பொறியியல் பட்டம் பயின்று கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசில் பணியிடம் பெற மத்திய தேர்வாணையத்தின் கீழ் போட்டி தேர்வுகளை எழுதி வந்துள்ளார். இதையடுத்து கடந்த 9 முறை போட்டி தேர்வுகளை எதிர்கொண்டு தோல்வியுற்ற நிலையில் மனம் தளராமல் கடந்த 2021-ஆம் ஆண்டு 10-வது முறையாக மத்திய தேர்வாணையத்தின் கீழ் நடைபெற்ற இந்திய வன பணி தேர்வில் தேர்வு எழுதினார். இதன் முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. இதில் இளைஞர் கிருபானந்தம் மாநில அளவில் முதல் இடமும், இந்திய அளவில் 16-வது இடத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவரான இந்த மாணவர் இந்திய வனப்பணிக்கு தேர்வாகியுள்ளது பெருமை அடைய வைத்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.