Type Here to Get Search Results !

குட்டியாக்கவுண்டன் புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

குட்டியாக்கவுண்டன் புதூர் அரசு தொடக்கப்பள்ளியில்  75 ஆவது சுதந்திர தின விழா  கொண்டாடப்பட்டது. பள்ளியின் முன்னாள் தலைவர் முருகேசன் அவர்கள்  தலைமையில்,  கடுக்காம்பாளையம் செயலாளர் சாமிநாதன்  முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.  இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சவிதா, கிளை செயலாளர் தங்கராஜ்,  இளைஞர் அணி நிர்வாகி பார்த்திபன் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள்  கலந்து கொண்டு இனிப்புகளையும், நோட்டு  புத்தகங்களையும் வழங்கி சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.