Type Here to Get Search Results !

லக்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சோலார் சி.எஸ்.ஐ காலனியில் ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லக்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சோலார் சி.எஸ்.ஐ காலனியில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் விழா பேருரை ஆற்றினார்கள். சட்டமன்ற உறுப்பினர் அவர்களுடன் வடக்கு ஒன்றிய கட்சியினர் அனைவரும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
        நடைபெற்ற நிகழ்வில் மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய தலைவர் ரெயின்போ கணபதி, வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் சரவணன், அரசு தொடர்பு பிரிவு துணைத் தலைவர் முரளி சந்திரன், தொழில் பிரிவு துணைத் தலைவர் அசோக்குமார், மகளிர் அணி தலைவர் திருமதி. ஹேமப்பிரியா, மகளிர் அணி பொதுச் செயலாளர் திருமதி. கீதா, ஒன்றிய அரசு தொடர்பு பிரிவு தலைவர் கே.ராஜா, ஒன்றிய பட்டியல் அணிபொதுச் செயலாளர் பிரவீன், ஒன்றிய இளைஞரணி தலைவர் கௌதம்,  இளைஞரணி செயலாளர் சதீஷ்,  ஒன்றிய செயற்குழு உறுப்பினர் லக்ஷ்மணன் மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.