Type Here to Get Search Results !

கொக்கராயன்பேட்டையில் மழை நீர் சூழ்ந்துள்ள அரசு பள்ளியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங் நேரில் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டையில் மழை நீர் சூழ்ந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்காலை பார்வையிட்டு, பள்ளியில் நீர் தேங்காத வகையில்
சீரமைப்பு பணிகளையும், முன்னெச்சரிக்கை பணிகளையும் விரைந்து மேற்கொள்ள பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் இளவரசி, குமாரபாளையம் வட்டாட்சியர் தமிழரசி உள்பட பள்ளியின் தலைமையாசிரியர், பொதுப்பணித் துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.