ஈரோடு தெற்கு மாவட்டம், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றியம், அவல்பூந்துறை பேரூராட்சி, காருத்து பாளையத்தை சேர்ந்த தெய்வத்திரு. என். சின்னப்பன் அவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் INA படைப்பிரிவில் இடம் பெற்றிருந்தார். அவரின் தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழக அரசு தாமிர பட்டயம் கொடுத்து கௌரவித்தது.
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது குடும்பத்தாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் தியாகி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்குள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, மரியாதை செலுத்தினார். மேலும் அவரது வாரிசுதாரர்களை சந்தித்து கௌரவப் படுத்தினார். இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்கள் உடனிருந்தனர்.