Type Here to Get Search Results !

கொளப்பலூர் அங்கன்வாடி கட்டிடத்தில் தமிழக அரசு சார்பாக 50 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா


தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் திரு.என்.நல்லசிவம் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.எஸ்.ஏ.முருகன் அவர்களின் அறிவுறுத்தலின் படியும் கொளப்பலூர் வாரச்சந்தையில் அமைந்துள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் தமிழக அரசு சார்பாக 50 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா  29.09.2022 நேற்று  நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கிளைக் கழக செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள், தகவல் தொழில்நுட்ப அணியினர், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர், வர்த்தக அணியினர், வழக்கறிஞர் அணியினர், தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஆசி வழங்கி விழாவை சிறப்பித்தனர்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.