Type Here to Get Search Results !

ஈரோடு, வசந்தம்‌ கோ-ஆப்டெக்ஸ்‌ விற்பனை நிலையத்தில்‌ இன்று (30.09.2021) மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி அவர்கள்‌ தீபாவளி 2022 சிறப்புத்‌ தள்ளுபடி விற்பனையினை துவக்கி வைத்தார்‌.

ஈரோடு மாவட்டம்‌, காந்திஜி சாலையில்‌ உள்ள வசந்தம்‌ கோ-ஆப்டெக்ஸ்‌ விற்பனை நிலையத்தில்‌ இன்று (30.09.2021) மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள்‌ தீபாவளி 2022 சிறப்புத்‌ தள்ளுபடி விற்பனையினை துவக்கி வைத்தார்‌.
இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள்‌ செய்தியாளர்களிடம்‌ தெரிவித்ததாவது, தமிழக அரசின்‌ கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ்‌ கடந்த 85 ஆண்டுகளாக தமிழகத்தின்‌ பல்வேறு பகுதிகளில்‌ தமிழக நெசவாளர்கள்‌ உற்பத்தி செய்யும்‌ இரகங்களை கொள்முதல்‌ செய்து இந்தியா முழுவதும்‌ உள்ள கோ-ஆப்டெக்ஸ்‌ விற்பனை நிலையங்கள்‌ மூலமாக சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது. கோ-ஆப்டெக்ஸ்‌ நிறுவனம்‌ பட்டு இரக உற்பத்தியில்‌ பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது. காஞ்சிபுரம்‌, சேலம்‌, கோவை, ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில்‌ உற்பத்தி செய்யப்படும்‌ பட்டுச்சேலைகள்‌ வாடிக்கையாளர்களின்‌ பெரும்‌ வரவேற்பை பெற்றுத்‌ திகழ்கின்றன. வாடிக்கையாளர்கள்‌ விரும்பும்‌ வகையில்‌ காலத்திற்கேற்ற புதிய வடிவமைப்பான மென்பட்டு சேலைகளையும்‌ கோ-ஆப்டெக்ஸ்‌ அறிமுகப்படுத்தி வருகின்றது. தீபாவளி 2022 சிறப்பு விற்பனைக்காக கைத்தறி இரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ்‌ அனைத்து விற்பனை நிலையங்களிலும்‌ 15.09.2022 முதல்‌ 30 சதவீதம்‌ அரசு சிறப்புத்‌ தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. மேலும்‌, தீபாவளி 2022 சிறப்பு விற்பனைக்காக தமிழகத்தின்‌ பல்வேறு பகுதிகளில்‌ நெசவாளர்களால்‌ உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன்‌ கூடிய பட்டு, பருத்தி சேலைகள்‌, போர்வைகள்‌, படுக்கை விரிப்புகள்‌, தலையணை உறைகள்‌, வேட்டிகள்‌, லுங்கிகள்‌, துண்டு இரகங்கள்‌, ஆடவர்‌ அணியும்‌ ஆயத்த சட்டைகள்‌, மகளிர்‌ விரும்பும்‌ சுடிதார்‌ இரகங்கள்‌, ஆர்கானிக்‌ பருத்தி சேலைகள்‌ மற்றும்‌ ஏற்றுமதி தரம்‌ வாய்ந்த ஷோம்‌ பர்னிசிங்‌ இரகங்கள்‌ ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்ட கோ-ஆப்டெக்ஸ்‌ விற்பனை நிலையத்தில்‌ கடந்த 2021 தீபாவளி விற்பனையில்‌ ஈரோடு கோ-ஆப்டெக்ஸ்‌ வசந்தத்தில்‌ ரூ.85.14 இலட்சமும்‌, கோபிசெட்டிபாளையம்‌ விற்பனை நிலையத்தில்‌ ரூ.28.37 இலட்சமும்‌ என மொத்தம்‌ ரூ.113.51 இலட்சத்திற்கு ரகங்கள்‌ விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனைத்‌ தொடர்ந்து, நடப்பாண்டிற்கு ஈரோடு கோ- ஆப்டெக்ஸ்‌ வசந்தத்தில்‌ ரூ.235.00 இலட்சமும்‌, கோபிசெட்டிபாளையம்‌ விற்பனை நிலையத்தில்‌ ரூ.85.00 இலட்சமும்‌ என மொத்தம்‌ ரூ.320 இலட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள்‌ சிறப்பு தள்ளுபடி விற்பனையில்‌ கோ-ஆப்டெக்ஸ்‌ நிறுவனத்தின்‌ ஆடைகளை வாங்கி நெசவாளர்களின்‌ வாழ்வாதாரத்தை மேம்பட உதவிட வேண்டும்‌ என தெரிவித்தார்‌.
இவ்விழாவில்‌ கோ-ஆப்டெக்ஸ்‌ தலைவர்‌ திரு.ஏ.வி.வெங்கடாஜலம்‌, நிர்வாக குழு இயக்குநர்‌ திரு.எஸ்‌.பி.ரமேஷ்‌, முதுநிலை மண்டல மேலாளர்‌ திரு.வெற்றிவேல்‌, முதுநிலை மேலாளர்‌ திரு.அன்பழகன்‌ (வடிவமைப்பு), மேலாளர்‌ திரு.கஜேந்திரன்‌ (அரசுத்திட்டம்‌), ஈரோடு வசந்தம்‌ விற்பனை நிலைய மேலாளர்‌ திரு.கோ.விஸ்வநாதன்‌ உட்பட கோ-ஆப்டெக்ஸ்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.