Type Here to Get Search Results !

வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட கம்பன் நகர், பாரதி நகர் பொதுமக்களுக்கு தலா ரூ.2000/- நிதி மற்றும் நிவாரன பொருட்கள் வழங்கப்பட்டது

குமாரபாளையத்தில் நேற்றுமுன்தினம் பெய்த கடும்மழையால் கம்பன் நகர் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட கம்பன் நகர், பாரதி நகர் சார்ந்த 39 குடும்பங்களுக்கு பொதுமக்களுக்கு தலா ரூ.2000/-  நிதியும்,  நிவாரன பொருட்களும்,    நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பாக அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. 
மாண்புமிகு சுற்றுலா துறை  அமைச்சர் உயர்திரு. டாக்டர் மா.மதிவேந்தன் அவர்கள், நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான உயர்திரு. கே. ஆர். என். இராஜேஸ்குமார் MP அவர்கள்,  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி. ஸ்ரேயாசிங் IAS அவர்கள், 
 நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் "மதுரா"எஸ்.எம்.செந்தில் அவர்கள், மாவட்ட கழக பொருளாளர் மு.ராஜாராம் அவர்கள், பள்ளிபாளையம் ஒன்றியசெயலாளர்
வெப்படை செல்வராஜ் அவர்கள்,  குமாரபாளையம் நகர திமுக செயலாளர் எம்.செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஓ.ஆர்.செல்வராஜ் அவர்கள்,  நகர்மன்றத்தலைவர் த.விஜயகண்ணன் அவர்கள்,  நகர்மன்ற துணைத்தலைவர் கோ.வெங்கடேசன் அவர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் மு.சத்தியசீலன், அம்பிகாராதாகிருஷ்ணன், தீபாவிஸ்வநாதன், ஜி.ரங்கநாதன்,  கதிரவன், சேகர் மற்றும் திமுக மாவட்ட, நகர, ஒன்றியம் மற்றும் நகரகிளை கழக நிர்வாகிகள் பங்குபெற்றனர். 
வெள்ள பாதிப்புகளை வெகு விரைவில் சரி செய்ய அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.