Type Here to Get Search Results !

கேரளா சமாஜம் & அறக்கட்டளை சார்பாக 75 ஆவது (Platinum jubilee) மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

 கேரளா சமாஜம் மற்றும் அறக்கட்டளை சார்பாக 75 ஆவது (Platinum jubilee) மற்றும் ஓணம் பண்டிகை ஈரோடு பரிமளம் மஹாலில் 09/10/2022 நேற்று கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E. திருமகன் ஈவெரா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் முன்னாள் கேரளா ஆளுநர் P. சதாசிவம் அவர்கள், ஈரோடு மாவட்ட ஆட்சியர் H. கிருஷ்ணன் உன்னி, கேரளா சமாஜம் தலைவர் P.V. சசிதரன், MCR டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் M.C. ராபின் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மேலும் இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகள் ராஜேஷ் ராஜப்பா, விஜயபாஸ்கர், செந்தில் ராஜா, டிட்டோ, விஜய கண்ணா, பிரவீன் மேலும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.