நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழு மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இணைந்து சி.நா.பாளையம் நகராட்சி துவக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் "விபத்தில்லா தீபாவளி" என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கு தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழுவின் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். விழாவில் செயலாளர் பிரபு அனைவரையும் வரவேற்று பேசினார். துவக்க பள்ளி தலைமை ஆசிரியை கற்பகம், உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.
குழந்தைகள் பட்டாசுகளை பெரியவர்கள் மேற்பார்வையிலும், இறுக்கமான காட்டன் உடைகளை அணிந்து கொண்டும், புஸ்வானம் கொளுத்தும் போது சமதரையில் வைத்து பக்கவாட்டில் நின்று கொளுத்த வேண்டும் என்றும், பட்டாசு வெடிக்கும் போது ஒரு வாளி நீர் எப்போதும் பக்கத்தில் பாதுகாப்புக்காக வைத்திருக்க வேண்டும் என்றும், தீ புண்ணுக்கு தண்ணீர் உடனே ஊற்ற வேண்டும். இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள் என்று பள்ளி மாணவ மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் குமாரபாளையம் தீயணைப்பு மீட்புப் பணி நிலைய அலுவலர் தண்டபாணி அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். மாணவ-மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமாக பதிலளித்தார். அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் தீயணைப்பு துறையைச் சார்ந்த அருள்குமார், கோகுல கிருஷ்ணன், கோகுல், ஜோதீஸ்வரன் மற்றும் தளிர்விடும் பாரதம் மகேந்திரன், செல்வராணி இருபால் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் தளிர்விடும் பாரதம் சரண்யா பிரபு அனைவருக்கும் நன்றி கூறினார்.