Type Here to Get Search Results !

வடக்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி செயலாளர் குப்புலட்சுமி தலைமையில் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து செலுத்தப்பட்டது.

ஈரோடு வடக்கு மாவட்டம் கள்ளிப்பட்டியில் அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் தலைவர் டாக்டர்.  கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு ஈரோடு வடக்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி செயலாளர் குப்புலட்சுமி தலைமையில், ஈரோடு வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கீதா நடராஜன் மற்றும்  கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ் ஏ முருகன் ஆகியோர்  முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் பிரியதர்ஷினி, ராஜேஸ்வரி, கனகா, சாந்தி சீதாராமன், கோபி நகரம் மகளிர் அணி சார்ந்த மகேஸ்வரி,  மனோன்மணி, கவிதா, திலகா, ஆனந்தவல்லி, உமா மகேஸ்வரி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர்  கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.