Type Here to Get Search Results !

ஈரோட்டில் பெரியாரின் 48 வது நினைவு நாளை ஒட்டி அமைச்சர் சு.முத்துசாமி, அந்தியூர் செல்வராஜ் எம்.பி. ஆகியோர் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

 மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,   தந்தை பெரியாரின் 48 வது நினைவு நாளை ஒட்டி,  ஈரோடு மாவட்டத்தில் பன்னீர் செல்வம் பூங்காவில் அமைந்துள்ள பெரியாரின் முழு உருவ சிலைக்கு  மாண்புமிகு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள்  மற்றும்   அந்தியூர் செல்வராஜ் எம்.பி. ஆகியோர் தலைமையில்,  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
அதைத்தொடர்ந்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்திற்கு  சென்று அங்கு அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில்  மாநில, மாவட்ட,  மாநகர, பகுதி கழக, வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.