Type Here to Get Search Results !

சிறுவலூர் ஊராட்சி சார்பாக பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூறாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி,  ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பண்பாளர் திரு. என் . நல்ல சிவம் அவர்களின் ஆலோசனைப்படி,  கோபி (தெற்கு) ஒன்றிய கழக செயலாளர் திரு. சிறுவலூர் ஏஸ்.ஏ. முருகன் அவர்கள் தலைமையில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்  ‌திரு. சிறுவலூர்    எஸ்.எஸ். வெள்ளியங்கிரி அவர்கள் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளர்  பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூறாவது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடும் விதமாக இன்று (19-12-2022) காலை 9.00 மணியளவில் சிறுவலூர் ஊராட்சி சார்பாக சிறுவலூர் நால் ரோட்டில் பேராசிரியரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவியும் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது. 
  இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, கழக நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், கிளைக் கழகசெயலார்கள் மற்றும் தொண்டர்கள் பலர்  கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.