Type Here to Get Search Results !

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 40 லட்சம் செலவில் புதிய கடைகள் அமைக்க பூமி பூஜை...

ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 40 லட்சம் செலவில் புதிய கடைகள் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. 
  அதைத்தொடர்ந்து மொடச்சூர் வாரச்சந்தையில் பூமி பூஜையுடன் தொடங்கி ஆதரவற்றோர் தங்கும் விடுதியை  வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம்,  நகர மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ்,  நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த்,  சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்,  கார்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். 
 இந்நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர் விஜய கருப்பு சாமி,  குமார சீனிவாசன் மற்றும் இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் திருவேங்கடம் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.