Type Here to Get Search Results !

கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டம் -2.0

கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று 02.01.2023 திங்கள் கிழமை தூய்மை இந்தியா திட்டம் -2.0  நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில் 2022-2023 ம் ஆண்டில் தனிநபர் கழிப்பிடம் கட்டிய 30 பயணாளிகளில் 1 நபருக்கு ரூ.9334/- (மத்திய அரசு ரூ.4000+மாநில அரசு ரூ 2667/- பேரூராட்சி பங்கு தொகை ரூ.2667/-) உரிய தொகை விடுவிக்கும் நிகழ்ச்சி இன்று பேரூராட்சி தலைவர்,
துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் (12,17),  செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சியில் அனைத்து நிலைகளிலும் பணிபுரியும் பணியாளர்கள்,
பயணாளிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் பேரூராட்சி பகுதிகளில் கழிப்பிடம் இல்லாதவர்கள் உடனடியாக இந்த 2.0 திட்டத்தை பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுமாறு பேரூராட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.