Type Here to Get Search Results !

கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 20 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ், நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில், துப்புரவு அலுவலர் சோழராஜ்,  துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார்,  கார்த்திக்,  சௌந்தரராஜன் ஆகியோர் நகராட்சியில் இருந்து 2 லாரிகளில் 20 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைத்தனர். 
கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தினமும் 18 டன் திடக்கழிவுகள் சேகரம் செய்யப்படுகிறது. இதில் 12 டன் மக்கும் கழிவுகளை இயந்திரத்தில் அரைத்து, தொட்டிகளில் நிரப்பப்பட்டு 40 நாட்கள் மக்கிய பிறகு அவற்றை குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மக்காத கழிவுகளான பிளாஸ்டிக், பேப்பர் போன்றவற்றில் மறு சுழற்சிக்கு உதவாதவற்றை மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 
 தற்போது 20 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரையிலும் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இருந்து 2,905 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.