Type Here to Get Search Results !

தென்னந்தோப்பு சின்னத்தில் வேட்பாளராக எம். கண்ணன் B.A., B.L., போட்டியிடுகிறார்...

சான்றோர் மக்கள் கட்சியின் புதிய  அலுவலகம் திறப்பு விழா மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டம் 18/02/2023 இன்று  நடைபெற்றது. இக்கட்சியின் சார்பில் வருகின்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் சான்றோர் மக்கள் கட்சியின் சின்னமான தென்னந்தோப்பு சின்னத்தில் வேட்பாளராக  எம். கண்ணன் B.A., B.L.,  அவர்கள்  போட்டியிடுகிறார்.   
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேற்படி நிகழ்வில் கருப்பண்ணன்,  மாரியப்பன்,  கல்லூரி செயலாளர் வெங்கடாசலம், சென்னிமலை நாடார் சங்க பொறுப்பாளர் கந்தசாமி,  சான்றோர் மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் ஜி. ராமச்சந்திரன்,  தேவர் சமுதாயம் சார்பாக பாலகுருசாமி,  முதலியார் சங்கம் சார்பாக கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.