Type Here to Get Search Results !

கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கத்தின் மாநில மையம் அறிவித்துள்ளபடி, 
1. CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தக் கோருதல்
2. நிறுத்தி வைக்கப் பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க கோருதல்
3. பட்டப் படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க கோருதல் 
4. கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க கோருதல்
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி
 கோபி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக
கோபிசெட்டிபாளையம் வட்டக் கிளையின் தலைவர் திரு. ஜெயந்தன் தலைமையில்,  வட்ட செயலாளர் திரு. சரவணக்குமார், 
வட்ட பொருளாளர் திரு. சுஜேஸ் ஆகியோர் முன்னிலையில்
கோபி வட்டத்தில் பணிபுரியும் 56 கிராம நிர்வாக அலுவலர்களும் கலந்து கொண்டு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட துணை தலைவர் திரு. நடராஜு, வட்ட துணை செயலாளர் திரு. பாருக் பாட்சா, 
வட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.