கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இரவு நேர குப்பை சேகரிக்கும் பணியை நகர மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார். நகராட்சிகளின் திருப்பூர் மண்டல நிர்வாக இயக்குனர் இளங்கோவன் அவர்கள் 28.03 2023 அன்று நகரில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை பார்வையிட்டு கூறிய அறிவுரைகளின் படி, இன்று முதல் தினசரி இரவு நேர வணிக நிறுவனங்களில் குப்பை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டது. நகரமன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அவர்கள் பணிகளை தொடங்கி வைத்தார். நகர் மன்ற உறுப்பினர்கள் ஹக்கீம், மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர். துப்புரவு அலுவலர் சோழராஜ் தலைமையில், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன் ஆகியோர் தங்கள் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களான ஹோட்டல்கள் பேக்கரிகள் கோழிக்கடைகள் மற்றும் இரவு நேர தள்ளுவண்டி கடைகளில் குப்பைகளை சேகரிக்கப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் விஸ்வநாதன், விஜயன், பூங்கொடி, சக்திவேலு, செல்வகுமார் மற்றும் தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் இப்பணிகளை உடனிருந்து கவனித்தனர்.
கோபி நகராட்சியில் இரவு நேர குப்பை சேகரிக்கும் பணி....
March 29, 2023
0