Type Here to Get Search Results !

நம்பியூர் பேரூராட்சியில் 16 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலைத் தொட்டியை என்.நல்லசிவம் திறந்து வைத்தார்.

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக நம்பியூர் ஒன்றியம் நம்பியூர் பேரூராட்சியில் 15-வது நிதிக்குழு மான்யத்தில் 3வது வார்டு கொன்னமடை பகுதியில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 16.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலைத் தொட்டியை ஒன்றிய கழகச் செயலாளர் நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் மெடிக்கல் ப. செந்தில் குமார் அவர்களின் தலைமையில்,  மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் திரு.என்.நல்லசிவம் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் 3வது வார்டு உறுப்பினர் திருமதி. சுப்புலட்சுமி சுப்ரமணியம் அவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள்,  ஒன்றிய பேரூராட்சி கழக நிர்வாகிகள், கழக நண்பர்கள் வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.