Type Here to Get Search Results !

எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பவானி சட்டமன்றத்திற்கு உட்பட்ட கவுந்தப்பாடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது....

அதிமுக கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பவானி சட்டமன்றத்திற்கு உட்பட்ட கவுந்தப்பாடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கவுந்தப்பாடி நால்ரோட்டில் முன்னாள் அமைச்சரும்,  ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும்,  பவானி சட்டமன்ற உறுப்பினருமான
 கே.சி.கருப்பணன் MLA அவர்கள் மற்றும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணை செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு உறுப்பினருமான S.ஜெயக்குமார் MLA அவர்கள் மற்றும் கழக ஒன்றிய / நகர செயலாளர்கள், மாவட்ட மற்றும் ஒன்றிய சார்பு அமைப்புச் செயலாளர்கள் மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து கோபிசெட்டிபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.  உடன் முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன்,  முன்னாள் அமைச்சர் கே சி கே கருப்பண்ணன்,  முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.