மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, ஈரோடு வடக்கு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகரத்தில் ரூபாய் 6.63 கோடி மதிப்பீட்டில் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம் SBM 2.0 அமைக்கும் பணியின் அடிக்கல் நாட்டு விழா நகர் மன்றத் தலைவர் திரு ஜனார்த்தனன் அவர்கள் தலைமையில், நகர மன்ற துணை தலைவர் திரு பி.ஏ.சிதம்பரம் அவர்கள் முன்னிலையில்
22.05.2023 இன்று நடைபெற்றது.
மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர், நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.