Type Here to Get Search Results !

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை...

கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு 
விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு (நாய்கள்) விதிகள் 2001 ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படி, பட்டர்பிளை நைலான் வலைகளைக் கொண்டு நாய்கள் பிடித்து அறுவை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்று, மயக்க மருந்து செலுத்தி அவைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. வெறிநாய்க்கடி தடுப்பூசியும் போடப்படுகிறது. அதன் பின்பு பராமரிப்பு மையத்தில் வைத்து பராமரித்து புண்கள் ஆரிய பிறகு மீண்டும் பிடித்த இடங்களிலேயே விடப்படுகிறது. 
இதுவரை 298 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் கருத்தடை செய்யாத நாய்களை பிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.