Type Here to Get Search Results !

கவுந்தப்பாடி பஞ்சாயத்தில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்...

பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட பவானி சட்டமன்றத்திற்குட்பட்ட கவுந்தப்பாடி பஞ்சாயத்தில்  10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சகோதரர் அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலோடும், 

 ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் திருமதி. கலைவாணி விஜயகுமார் அவர்களின் வழிகாட்டுதலோடும்,  மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் க. மகுடேஸ்வரி அன்பு ராஜா அவர்கள்  தலைமையில் பவானி தெற்கு ஒன்றிய மண்டல் தலைவர் திரு. துரைசாமி மற்றும் பொதுச் செயலாளர் திரு. சத்தியமூர்த்தி,  விவசாயி அணி மாவட்ட தலைவர் திரு. சங்கர் ராஜா ஆகியோரது முன்னிலையில்  ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. 

இந்நிகழ்வில் வரவேற்புரை திரு. ஜீவானந்தம் மாவட்ட செயற்குழு உறுப்பினர், சிறப்பு அழைப்பாளர்கள் திரு. ஸ்ரீதர் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மற்றும் ஒரு சிறப்பு அழைப்பாளர் VHB மாவட்ட பொறுப்பாளர் திரு சிவக்குமார் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  திருமதி . கலைவாணி மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மண்டல் துணைத் தலைவர்  நன்றியுரை ஆற்றினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.