கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் தூய்மை பணிகள் செய்து வரும் நிரந்தர தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமானது மின் நகர் பகுதியில் உள்ள ரோட்டரி சங்க அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் சிவா அவர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், தடுப்பு ஊசி செலுத்துதல் மற்றும் மருந்துகள் வழங்கினர்.
மருத்துவ முகாமை நகர்மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ், ஆணையாளர் சசிகலா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ரோட்டரி சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணியாளர்களுக்கு இனிப்பு, காரம், காபி ஆகியவற்றை வழங்கினர். மருத்துவ முகாமில் 180 தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.