Type Here to Get Search Results !

சீனாவில் வேலை வாய்ப்பு - ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் கருத்தரங்கு...

கவுந்தப்பாடி அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் சீனாவில் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு பற்றிய கருத்தரங்கு நடை பெற்றது. 
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் திரு.S.பிரகதீஸ்வரன் வரவேற்புரை வழங்கினார். சீன ஊடகப்பிரிவில் பணிபுரியும் பத்திரிக்கையாளர் திரு. M. பண்டரிநாதன் அவர்கள் கலந்து கொண்டு ஒழுக்கம், திறன் வளர்ப்பு, உயர்ந்த நோக்கம்,  சீனாவில் கல்வி கற்கும் முறை, சீனாவில் நிலவும் ஆசிரியர் மாணவர் நல்லுணர்வு பற்றியும் எடுத்துக் கூறினார்.  இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் திரு K.C.கருப்பணன், தலைவர் திரு.P.வெங்கடாசலம், இயக்குனர் K.கவியரசு, முதன்மை செயல் அலுவலர் G.கௌதம் மற்றும் அனைத்து துறை தலைவர்களும் இருபால் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் திரு.P.மணி நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.