Type Here to Get Search Results !

நுண்ணுயிரியல் துறை சார்பாக மைக்ரோலூமினா சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா...

கோபி அருகே ஒத்தக்குதிரையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரியில் 05.08.2023 நேற்று,  நுண்ணுயிரியல் துறை சார்பாக மைக்ரோலூமினா (microlumina)சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் திரு. பி. வெங்கடாசலம் முதன்மை வகித்தார். விழாவானது கடவுள் வாழ்த்து பாடலுடன் துவங்கியது. நுண்ணுயிரியல் துறையின் தலைவர் முனைவர் சு.மஞ்சு வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆ. மோகனசுந்தரம் தலைமையுறை ஆற்றினார், அதில் மாணவ சங்கத்தின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். 
மேலும் கல்லூரியின் துணை முனைவர். சி.நஞ்சப்பா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவர் நுண்ணுயிரின் அன்றாட வாழ்வியல் பயன்பாடு பற்றி கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து நுண்ணுயிரியல் துறையின் தலைவர் மைக்ரோ லூமினா சங்கத்தின் உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை நேரு மகா வித்யாலயா கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை தலைவர்  முனைவர் ஆர். பாக்யராஜ் 
பங்கேற்று நுண்ணுயிரியல் துறையின் முக்கியத்துவம்,  பயன்பாடு மற்றும் வளர்ச்சி பற்றி சிறப்புரையற்றினார்.
மைக்ரோலூமினா சங்கத்தின் உறுப்பினர்களாக சந்துரு, அஞ்சு ஸ்ரீ, சங்கர் கணேஷ், சங்கமி, மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  நுண்ணுயிரியல் துறையின் உதவி பேராசிரியை திருமதி ர.திவ்யஸ்ரீ நன்றியுரை வழங்கினார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.