Type Here to Get Search Results !

தொல் திருமாவளவனின் மணிவிழா கொண்டாடுவது தொடர்பாக மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்...

கோபிசெட்டிபாளையம் வாசு விடுதியில் விடுதலை சிறுத்தையின் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனின் மணிவிழா கொண்டாடுவது தொடர்பாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் விசா.தங்கவேலின் தலைமையில் மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் முதல் தீர்மானமாக விசா தங்கவேல் அவர்கள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 61வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட முழுவதும் 61 இடங்களில் 60 அடி கொடிக்கம்பங்கள் நடப்படும் என்று தெரிவித்தார் மற்றும் அது சமயம் ஆகஸ்ட் 17ஆம் தேதி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு காப்பவுன் தங்கம் மோதிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார் அக்டோபர் முதல் வாரத்தில் இந்திய ஜனநாயக மாநாடு நடைபெற உள்ளது.  அது சமயம் ஈரோடு மேற்கு மாவட்ட முழுவதும் மக்களை திரட்டுவோம் என்று தீர்மானத்தில் 
தெரிவித்தார். மற்றும் நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் ஈஸ்வரன்,  பொறுப்பாளர், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ். கிருஷ்ணன்,. முன்னாள் மாவட்டசெயலாளர் அம்பேத்கர்,  செய்தி தொடர்பாளர் அலெக்ஸ்,  மாநில பொதுச் செயலாளர் காஞ்சி மனோகரன்,  மாவட்ட செயலாளர் மாரிமுத்து மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.