Type Here to Get Search Results !

அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது...

ஈரோடு மொடக்குறிச்சி தொகுதி, கணபதிபாளையம் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்து கொண்டு 175 மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினார். 


இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய தலைவர் டெக்கான் பிரகாஷ், பாஜக மூத்த நிர்வாகி பாலகுமார், தலைமை ஆசிரியர் டே. சுகுணா பிளாரன்ஸ், மு. ராஜேந்திரன் தலைவர் கட்டிடக்கமிட்டி பழனிவேல்சாமி, செயலாளர் ஒளிரும் காளமங்கலம் பவுண்டேஷன் தமிழ்ச்செல்வன், உப தலைவர் கனவில் கிராம ஊராட்சி சென்னியப்பன், எஸ்.எம்.சி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள், உள்ளூர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.