Type Here to Get Search Results !

கோபிசெட்டிபாளையத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா - சிறுவலூர் எஸ் ஏ முருகன் தலைமையில் நடைபெற்றது.

சமூகம் மற்றும் உரிமைத் துரை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக கோபிசெட்டிபாளையத்தில்  தனியார் திருமண மண்டபத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் எஸ் ஏ முருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 100 பெண்களுக்கு தமிழக அரசின் சார்பாக வளைகாப்பு நடத்தி, சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கொளப்பலூர் பேரூராட்சி தலைவர் அன்பரசு ஆறுமுகம்,  வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் தலைவர் கைலாஷ் குமார் மற்றும் மருத்துவர்கள்,  செவிலியர்கள்,  சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.