Type Here to Get Search Results !

உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...

சனாதன தர்மத்தையும் இந்து மதத்தையும் ஒழிப்பேன் என்று பேசிய உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பாக சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணியின் ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி அவர்கள் தலைமையிலும்,மாவட்ட பொருளாளர் சுரேஷ் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் இந்து முன்னணி ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீபாலமுருகன், மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள், பொதுமக்கள், மற்றும் பெண்கள் உட்பட  150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

காவல்துறையால் ஆர்பாட்டத்திற்க்கு அனுமதி மறுக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.