இது பற்றி அவர்கள் கூறுகையில்,
அகமுடைய இனத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் மற்றும் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் விட்டு சென்ற தேசப் பணியையும், ஆன்மீக பணியையும் மேலும் வலுப்பெற இளைஞர்களாக ஒன்றிணைந்து தலைமை பொறுப்பேற்று உள்ளோம் என தெரிவித்தனர்.
மேலும், இந்த கூட்டத்தில் மருதுவம்சத்தின் நிறுவனத் தலைவராக திரு. சரவணன் அகமுடையார் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் பொதுச்செயலாளராக திரு. இராஜசேகர் (எ) திலீப் அகமுடையார், மாநில செயலாளராக கந்தசாமி அகமுடையார், மாநில பொருளாளராக திரு. இராஜ பாண்டியன் அகமுடையார், மாநில மகளிரணி தலைவியாக திருமதி. துளசி மணி சக்திவேல் நாச்சியார், மாநில கல்வி வளர்ச்சி மேம்பாட்டு தலைவராக விஷ்வா அகமுடையார், மாநில தொழில் வளர்ச்சி தலைவராக திரு. விஜயகுமார் அகமுடையார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.