Type Here to Get Search Results !

காந்தியின் 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோபிசெட்டிபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் அஹிம்சை ஊர்வலம் ...

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோபிசெட்டிபாளையத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து கோபிசெட்டிபாளையம் காங்கிரஸ் கட்சியினர் அஹிம்சை ஊர்வலம் நடத்தினர். 

அஹிம்சை ஊர்வலத்தை முன்னாள் நகர் மன்ற தலைவர் டி என் நல்லசாமி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். 
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் ஊடகப்பிரிவு செய்தி தொடர்பாளர் செந்தில்குமார்,  மாவட்டத் தலைவர் எஸ் வி சரவணன்,  கோபி வட்டார தலைவர் P. சண்முகத்தரசு,  வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் பி உதயகுமார்,  வக்கீல் இந்துஜா வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

கோபி சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே எஸ் கோவதண்டன் இளைஞர்,  காங்கிரஸ் தலைவர் எம் பிரபாகரன்,  கோபி நகர மன்ற துணை தலைவர் தீபா,  வேலுமணி,  ரவிச்சந்திரன்  மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.