தூய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஈரோடு மாநகராட்சி 36வது வார்டு மாமன்ற உறுப்பினரும், தி.மு.க. விவசாய அணி ஈரோடு மாநகர துணை செயலாளராக பதவி வகித்து வரும் என்.செந்தில்குமார் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
அதேபோல் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது வார்டில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இனிப்பு, பட்டாசு பாக்ஸ் மற்றும் புத்தாடைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், செந்தில்குமாரின் தந்தையான பழனியப்பா நாராயணசாமி (பழனியப்பா எலக்ட்ரிக்கல் ஹார்டுவேர் நிறுவனத்தின் உரிமையாளர்)
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சைவ மற்றும் அசைவ விருந்து அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், 36வது வார்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவினை கவுன்சிலர் செந்தில் அவர்களின் உதவியாளர் கௌதம் மற்றும் 36வது வார்டு இளைஞர்கள் பலர் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினர்.