Type Here to Get Search Results !

மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக சென்ற 60 தூய்மை பணியாளர்கள் - என்.ஆர் நாகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக கோபிசெட்டிபாளையத்திலிருந்து 60 தூய்மை பணியாளர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் புறப்பட்டனர். நிவாரண பணிக்காக செல்லும் வாகனத்தை கோபி நகர்மன்ற உறுப்பினர் என்.ஆர் நாகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணி மற்றும் சுகாதாரப் பணிகளுக்காக கோபிசெட்டிபாளையம் , சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி, பவானி உள்ளிட்ட 4-நகராட்சிகளில் இருந்து 60- தூய்மை பணியாளர்கள்,  4- துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், 2 -துப்புரவு ஆய்வாளர்கள், 1-துப்புரவு அலுவலர் ஆகியோர் வெள்ள தடுப்பு பணி உபகரணங்களுடன் மிக்ஜாம் புயல் நிவாரண பணிக்காக பேருந்து மூலம் புறப்பட்டனர். நிவாரண பணிக்காக செல்லும் வாகனத்தை கோபி நகர்மன்ற உறுப்பினர் என்.ஆர் நாகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.