Type Here to Get Search Results !

கரட்டடிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்...

கோபிசெட்டிபாளையத்தில்  லக்கம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கரட்டடிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மற்றும் 
நேஷனல் எஜுகேஷன் அண்ட் சேரிடபுள் பவுண்டேஷன் சார்பாக 
மாணவ மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. 

இதில் மாணவ மாணவியர்கள் பேச்சுப் போட்டி, மழை நீர் சேகரிப்பது மற்றும் கலி மண்ணை கொண்டு பொம்மைகள் செய்வது  ஆகிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு அவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். 

இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் அஷ்ரப் நிஷா பானு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் செயலாளர் T. கிருத்திகா, அறக்கட்டளையின் பொருளாளர் S. பிரியங்கா மற்றும் நிர்வாகிகள் மேற்பார்வையில் நடைபெற்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.