Type Here to Get Search Results !

கரட்டடிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மாணவர்களுக்கான பல வகையான போட்டிகள்.....

கோபிசெட்டிபாளையம் கரட்டடிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், நேஷனல் எஜுகேஷன் அண்ட் சேரிட்டபிள் பவுண்டேஷன் சார்பாக கையெழுத்துப் போட்டி, ஓவியப்போட்டி, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி என மாணவர்களுக்கான பல வகையான போட்டிகளை நடத்தப்பட்டது. 

இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு அறக்கட்டளையின் சார்பாக சான்றிதழ்களும்,  மெடல்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர் கோபால் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் நிறுவனர் பிரதீப் அவர்கள் முன்னிலையில் லக்கம்பட்டி VAO ரவீந்திரன், லக்கம்பட்டி பேரூர் தலைவர் அன்னக்கொடி ரவிச்சந்திரன், செய்யாபாளையம் VAO அனுசியா, பள்ளி தலைமை ஆசிரியை அசுரப்நிஷாபானு அவர்கள்  

மற்றும் நேஷனல் எஜுகேஷன் அண்ட் சேரிட்டபிள் பவுண்டேஷன் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.