Type Here to Get Search Results !

கோனேரிப் பட்டியில் புடவைக்காரி அம்மன் கோவிலில் மார்கழி மாத அமாவாசையையொட்டி இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது.....

சேலம் மாவட்டம்,  ஊஞ்சப்பாளையம் அருகேயுள்ள கோனேரிப் பட்டியில் புடவைக்காரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாத அமாவாசையையொட்டி இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. 


இதில்,  இந்த மாதம் 
 பூஜை செய்ய கட்டளைதாரரான  வி.சரவணன்,  ராதாமணி மற்றும் 
குருவ ரெட்டியூர் என்.கார்த்திகேயன்,  செல்வி, நசியனூர் திவாகர், 
குரு,  பிரியா குடும்பத்தார் ஆகியோர் புடவைக்காரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து விஷேச பூஜை செய்தனர். 

இதை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. 
இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.