Type Here to Get Search Results !

அவ்வையார் பாளையம் நியாய விலை கடையில் சிறுவலூர் எஸ் ஏ முருகன் அவர்கள் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,  தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்புகள் அனைத்து நியாய விலை கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.  

இதனையடுத்து, ஈரோடு மாவட்டம்,  கோபிசெட்டிபாளையம் கலிங்கியம் ஊராட்சியில் அவ்வையார் பாளையம் நியாய விலை கடையில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் என்.  நல்லசிவம் அவர்களின் ஆணைக்கிணங்க திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் எஸ் ஏ முருகன் அவர்கள் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.  

நிகழ்ச்சியில், ஏ எம் காளீஸ்வரன்,  நாச்சிமுத்து,  ராஜா,  பிரபு மற்றும் திமுக கழக நிர்வாகிகள்,  பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.