Type Here to Get Search Results !

கோபிசெட்டிபாளையம் - பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயன்படுத்திய குடிநீர் பாட்டில்களை முறையாக போடுவதற்காக குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டது.

கோபி வாசவி கிளப் மற்றும் சங்ககிரி செட்டியார் ஜவுளிக்கடை சார்பாக,  கோபிசெட்டிபாளையம் நகராட்சி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயன்படுத்திய குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் முறையாக குப்பைத் தொட்டியில் போடுவதற்காக குப்பைத் தொட்டிகள் 
வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வை,  நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்.   மேலும் இந்நிகழ்ச்சியில் கோபி வாசவி கிளப் உறுப்பினர்கள், சங்ககிரி செட்டியார் ஜவுளி கடை உரிமையாளர் மற்றும் நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் சௌந்தரராஜன், நிருபன் சக்ரவர்த்தி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.